சொல்லாத
நிறத்தில் நினைவுகள்
சொல்லாத
நிறத்தில் ஒரு மழை...
கருப்பு
சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம்
பார்த்து கொண்டு இருந்தேன்
எல்லாரும்
சொல்வது போல
அது நீல
நிறமாக இல்லை
அதன் நிறம்
எனக்கு நினைவில்லாத
ஒரு நிறமாகவே
இருந்தது
மேகங்கள் அற்ற
வெறுமையான
வானத்தில் சில
நட்சத்திரங்கள் இருந்தன
நீ
வரும்போதெல்லாம் வானத்தின்
நிறத்திலேயே
உடையணிந்து வருவாய்..
பின்னர்
பிரிந்து இருந்த ஒரு தருணத்தின்
உரையாடலின்
போது
நிறம் என்று
ஏதுமில்லை என்றும்
அது ஒரு
அடையாளம் என்றும் பேசினோம்...
நான் அடையாளம்
கண்டு கொண்ட
நிறங்களில்
வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு
சட்டமிட்ட சன்னல்களுக்கு
வெளியே மழை
இருந்தது...
No comments:
Post a Comment