பிஞ்சு கைகளிலே காகிதம் படகாய்
மாறி கடலாகி போன மழை நீரில்
மிதக்க தயாராய்
விட்ட படகு மெல்லிய காற்றின்
திசையில் செல்ல தன் கண்டுபிடிப்பின்
வெற்றியை குழந்தை ரசிக்க
வந்தது எங்கிருந்தோ மழை
விழியோரம் கண்ணீர் நெஞ்சிலோ
சொல்லமுடியாத வலி தன் முன்னே
தன் படகு தண்ணீரில் முங்குவதை
காண சகிக்க முடியாத குழந்தைக்கு
ஆனால் காகித படகோ வாழ்க்கை
தத்துவத்தை மிக எளிதாக புரிய வைத்தது
அருகில் நின்று அதை பார்த்து
கொண்டிருந்த வாலிபனுக்கு..