Friday 23 August 2013

ஓடம் அழைக்கிறது...















ஒரு தீவு
ஒரு நிலவு
ஒற்றை மரம்
கரையில் ஓடம்

காத்திருக்கிறேன்
நான் மட்டும்

கலைத்துப் போகும்
காற்றைப் போல்...
என் முடிஅலையும்
உன் கைகளுக்காகவே

பின்னி விடும்
என் கூந்தலையும், என்னையும்
கோர்த்துக்கொள்
உன் விரல்களில்

நான்
தீட்டி வந்த கண்மை...
என்னை பின்னிப்போடும்
உன் விழிகளுக்காகவே

வட்ட நிலவொளியில்
வையகம் மறந்திடலும்
கவிதை விரல்களால்
மெய்க் காவியம் எழுதிடலும்
ஓசையற்ற இசைப் பயணம்

ஓடம் அழைக்கிறது
வா போய் வரலாம்


அக்கரைக்கு...

6 comments:

  1. வாழ்த்துகள்.. கவிதை சாரலால் பெருகி வழியட்டும் இந்த இடம்

    ReplyDelete
  2. "வட்ட நிலவொளியில்
    வையகம் மறந்திடலும்
    கவிதை விரல்களால்
    மெய்க் காவியம் எழுதிடலும்"

    வாழ்த்துக்கள். நான் எனக்குள்சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழகு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான எளிய கவிதை! தொடரட்டும் உங்கள் கவிதை வீச்சு!

    ReplyDelete