Friday 30 August 2013
Tuesday 27 August 2013
கனவொன்று கண்டேன்
கனவொன்று கண்டேன்
அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்
கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்
வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்
விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க
எத்தனை கனவுகள் வேண்டுவேன்...?
Monday 26 August 2013
Friday 23 August 2013
கதை...
கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி.
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
முடிவு வரும் என்று.
ஓடம் அழைக்கிறது...
ஒரு தீவு
ஒரு நிலவு
ஒற்றை மரம்
கரையில் ஓடம்
காத்திருக்கிறேன்
நான் மட்டும்
கலைத்துப்
போகும்
காற்றைப்
போல்...
என்
முடிஅலையும்
உன்
கைகளுக்காகவே
பின்னி விடும்
என்
கூந்தலையும், என்னையும்
கோர்த்துக்கொள்
உன்
விரல்களில்
நான்
தீட்டி வந்த
கண்மை...
என்னை
பின்னிப்போடும்
உன்
விழிகளுக்காகவே
வட்ட
நிலவொளியில்
வையகம்
மறந்திடலும்
கவிதை
விரல்களால்
மெய்க்
காவியம் எழுதிடலும்
ஓசையற்ற இசைப்
பயணம்
ஓடம்
அழைக்கிறது
வா போய்
வரலாம்
அக்கரைக்கு...
Subscribe to:
Posts (Atom)